எவன் என்னும் வினைமுற்று
அஃறிணைக்கு உரியதோர் வினாச்சொல் பாலுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். அஃறிணை இடத்து இருபாற் கிளவிக்கும் எவன் என் வினா ஒக்கும் என்று சொல்லுவர், எ - று.
எ - டு. இப் பண்டியுள்ளது எவன், இப் பண்டியுள்ளன எவன் என வரும்.
(22)