வினையெச்சம் அடுக்கி வருவழி வருவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். வினை யெச்சச் சொற்றாம் சொற்கடோறும் முற்றுப் பெறாது பலவாற்றானும் அடுக்கிவரினும், இறுதி நின்றது முடிய ஏனையவும் பொருண்முடிவு பெற்றனவாம், எ - று. எ - டு. உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான். உண்டு பருகிக் கூத்திற் புக்கு வந்தான் என வரும். பிறவுமன்ன. (36)
|