இதுவும் அது இ - ள். வருங் காலத்தும் நிகழ் காலத்தும் வரும் வினைச் சொல்லாகிய சொல், இறந்தகாலத்துக் குறிப்பொடு தோன்றல் விரைந்த பொருள் என்மனார் புலவர், எ - று. ஒருவனை உண்டாயோ, போதாயோ என்றவழி, உண்ணாதவனும் உண்டேன், போந்தேன் என்னும்; உண்கின்றானும் அவ்வாறு சொல்லும். இவ்வாறு விரைவு குறித்து நின்றவாறு கண்டு கொள்க. ஓரும், ஆங்கும் அசைகள். (44)
1. கிளத்தல்--ஏனை உரைப்பாடம்.
|