ஈண்டு உரைக்கப்படுகின்ற இடைச்சொல் நான்கும் பொருள் புணர் இடைச்சொல்லும், பொருள் புணரா இடைச்சொல்லும் என இருவகைப்படும். அவற்றுள், பொருள் புணர் இடைச்சொல் லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். கழிந்தது என்னும் பொருண்மையும், ஆம் என்னும் பொருண்மையும், எஞ்சிய இசையான் உணரும் பொருண்மையும் உணரவரும்: மன் என்னுஞ் சொல், எ - று. மன் மன்னை என நின்றது. எ - டு.சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே (புறம்-235) என்புழி, மன் கழிந்தது என்னும் பொருள்பட நின்றது. ‘புதுமலர் அணிய வின்று வரி, னதுமனெம் பரிசி லாவியர் கோவே.’ (புறம்-147) இதனுள் மன் என்பது ஆம்என்பது குறித்து நின்றது. கூரியதோர் வாண் மன் என்றவழித், திடமின்று என்றானும், வெட்ட வல்லார் உளராயின் என்றானும் ஒழிந்த சொல்லினான் உணரும் பொருள்பட்டது. (4)
|