கொன் என்னும் இடைச்சொல்லின் பொருள்

251.அச்சம் பயமிலி காலம் பெருமையென்(று)
அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே.

இதுவும் அது

இ - ள். அச்சப் பொருண்மையும், பயனின் றென்னும் பொருண்மையும், காலப் பொருண்மையும், பெரிதென்னும் பொருண்மையும் பற்றி வரும்: கொன் என்னுஞ் சொல், எ - று.

எ - டு. கொன் முனை யிரவூர் போல (குறுந்-91.) என்பது அச்ச முணர நின்றது. கொன்னே கழிந்தன் றிளமையும் (நாலடி-55.) என்புழிப் பயனின்மை யுணர நின்றது. கொன் வரல் வாடை என்ற வழிக், காலத்து வருகின்ற வாடை எனக் கால முணர நின்றது. கொன்னூர் துஞ்சினும் (குறுந்-138.) என்றவழிப், பெருமையுணர நின்றது.

இம்மூன்று சொல்லும் பெயர் வினையை யொட்டி வாராது தனிவந்து ஒப்பில் வழியாற் பொருளுணர்த்தினமையான், ஒப்பில் வழியாற் பொருள் செய்தன. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க.

(6)