உயர் சொற் கிளவி-இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.
எ - டு. அவர் வந்தார் எனவரும். ஒருவனையும் ஒருத்தியையும் ஒன்றினையும் இவ்வாறு கூறுதல் வழுவாயினும், உயர்வுகுறித்துச் சொன்னமையான் அமைதியாயிற்று.
‘இயற் பெயர்முன்ன ராரைக் கிளவி-பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே’ (இடையியல் 22.) என்புழியடங்காதோ எனின் ஆண்டு, நம்பி, நங்கை, சாத்தன் என்னும் பெயர் தானே பால் காட்டுதலான் அதன்மேல் ஓர் இடைச்சொல்லாயிற்று, ஈண்டுப் பன்மைச் சொற்றானே ஒருமைக்கு வருதலின் அடங்காதாயிற் றென்க.
வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், ஒரு பசுவை எம் அன்னை வந்தாள் எனவும், பெருங்கொல்லன், பெருவண்ணான் எனவும் வருவனவுங் கொள்க.
(27)