இதுவும் அது. இ - ள். யா முதலாகச் சொல்லப்பட்ட ஏழு சொல்லும் அசைநிலைக் கிளவியாம், எ - று. எ - டு. யா - “தோழியா சுவர்க்கம் போக்கிங்கென்”. கா - “புற நிழற் பட்டாளோ வவளிவட் காண்டிகா”. பிற - “தான் பிற-வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி”. (புறம். 140) பிறக்கு - “நசைபிறக் கொழிய”. அரோ-“நோதக, விருங்குயி லாலுமரோ”. (கலி 33.) போ-“பிரியின் வாழா தென்போ தெய்ய”. மாது-“விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் னெஞ்சே.” (நற்-178) என வரும். (30)
1. ஆவேழ் சொல்லும் என்பதும் பாடம்.
|