உம்மைக்குரியதோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். எச்ச உம்மையும், எதிர்மறை உம்மையும் தத்தமுள் மயங்கும் உடனிலை இல, எ - று.
எ - டு. சாத்தனும் வந்தான் என்றவழிக் கொற்றனும் வரும் என்றாதல், வந்தான் என்றாதல் கூறுதலன்றி, வாரான் என்னற்க. ஒரு தொழிலே கூறல் வேண்டும், என்றவாறு.
(34)