எண்ணேகாரம் இடையிட்டும் வரும்

284.எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும்
எண்ணுக்குறித் தியலும் என்மனார் புலவர்.

இதுவும் அது: ஏகாரத்திற்குப் புறனடை உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். எண்ணுக்குறித்த ஏகாரம் சொற்றொறுங் கொள்ளாது ஒருவழிக் கொளினும் எண்ணுக் குறித்து நடக்கும், எ - று.

எ - டு. தோற்றம் இசையே நாற்றஞ் சுவையே, உறலோடாங் கைம் புலனென மொழிப என்புழி, இடையிட்டு வந்தும் எண்ணுக் குறித்தது.

(39)