எண்ணின்கண் வருவன சில இடைச்சொல் உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள். உம்மை தொக்க எனவின் திரிபாகிய எனா என்னுஞ் சொல்லும், ஆவீறாகிய என்று என்னும் சொல்லும் எண்ணின்கட் பட்டன. எனவும் என்பது எனா எனவும், என்று என்பது என்றா எனவும் வரும், எ - று.
எ - டு. வளிநடந் தன்ன வாஅய்ச்செல் லிவுளியொடு--கொடி நுடங்கு மிசைய தேரின ரெனாஅக்--கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு--மலைமாறு மலைக்கும் களிற்றின ரெனாஅ (புறம்-197) என்பதனுள் எனவும் என்பது எனா என்றுவந்து எண்ணுக் குறித்தவாறு கண்டுகொள்க. ஒப்பு முருபும் வெறுப்பு மென்றா, கற்பு மேரு மெழிலு மென்றா (பொருளியல்-53). என்பதனுள் என்று என்பது ஆவொடு கூடி எண்ணுக் குறித்தவாறு கண்டுகொள்க.
(40)