யாது, எவன் என்னும் சொற்கள்

29.யாதெவன் என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்.

வினா வழுக் காத்தலை நுதலிற்று

இ - ள். யாது எவன் என்று சொல்லப்பட்ட இரண்டு சொல்லும் அறியாத பொருட்கட் பொருந்தத் தோன்றும், எ - று.

நின்னாடு யாது? இப்பண்புள்ளது எவன்? என வரும்.

ஏனைப்பால் உணர்த்தும் வினாச்சொற்களெல்லாம் கூறாது இவ்விரண்டினையும் வகுத்துக் கூறியது என்னை யெனின், ஆண்டு உளதோர் வழுவமைத்தற்பொருட் டென்க.

(29)