வினா வழுக் காத்தலை நுதலிற்று
இ - ள். யாது எவன் என்று சொல்லப்பட்ட இரண்டு சொல்லும் அறியாத பொருட்கட் பொருந்தத் தோன்றும், எ - று.
நின்னாடு யாது? இப்பண்புள்ளது எவன்? என வரும்.
ஏனைப்பால் உணர்த்தும் வினாச்சொற்களெல்லாம் கூறாது இவ்விரண்டினையும் வகுத்துக் கூறியது என்னை யெனின், ஆண்டு உளதோர் வழுவமைத்தற்பொருட் டென்க.
(29)