இ - ள். அதிர்வு என்பதூஉம், விதிர்வு என்பதூஉம் நடுக்கம் என்பதன் பொருள் உணர்த்தும், எ - று.
எ - டு. ‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை, அதிர வருவதோர் நோய்’ (குறள்-429); ‘விதிர்ப்புற வறியா வேமக் காப்பினை’ (புறம்-20).
(22)
1. ‘அதிழ்வு’ என்ற பாடமும் உளதெனச் சேனாவரையர் உரையால் தெரிகின்றது.