செப்பில் வழாநிலை

34.அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்.

செப்பின்கண் வழுக்காத்தலை நுதலிற்று.

இ - ள்.வினாவிய பொருளையே சொல்லி அல்லதில்லை யெனின், சுட்டிக் கூறுக, எ - று.

இப்பயறு அல்லதில்லை; இப்பட்டு அல்லதில்லை என்க. எனவே அவன் கருத்திற்கேற்ற பயறும் பட்டும் இல என்றவாறாம்.

(34)