|
கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் என்பவற்றின் பொருள் | 345. | கம்பலை சும்மை கலியே யழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள. |
| இ - ள். கம்பலை என்னும் சொல்லும், சும்மை என்னும் சொல்லும், கலி என்னும் சொல்லும், அழுங்கல் என்னும் சொல்லும் இவை நான்கு சொல்லும் அரவம் என்னும் பொருளையுடைய, எ - று. எ - டு.‘கம்பலை மூதூர்’ (புறம்-54); ‘ஒலிபெருஞ் சும்மையொடு’; ‘கலிகொளாயம் (அகம்-11); ‘உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கலூரே’(நற்-203) (53)
|
|