இ - ள். துவைத்தல் என்னுஞ் சொல்லும், சிலைத்தல் என்னுஞ் சொல்லும், இரங்கல் என்னுஞ் சொல்லும், இயம்பல் என்னுஞ் சொல்லும் ஓசைப் பொருண்மையுடைய சொல், எ - று.
எ - டு. ‘வரிவளை துவைப்ப’ ‘ஆமா நல்லேறு சிலைப்ப’ (முருகு-315). ‘ஏறிரங் கிருளிடை’ (கலி-46,) ‘கடிமரந் தடியு மோசை தன்னூர்-நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப’ (புறம்-36)
(62)
1. இயம்பலும் இரங்கலும் என்பது ஏனை உரையாளர் பாடம்.