செப்பு வழுக்காத்தலை நுதலிற்று. இ - ள். சுட்டெழுத்து முதலாகிய காரணச் சொல்லும், சுட்டுப்பெயர் இயற்கை போலப் பொருந்தத் தோன்றும், எ - று. என்றது பிற்படக் கூறப்படும், எ - று. எ - டு. மழை பெய்தது, அதனால் யாறு பெருகும். பிறவும் அன்ன. இது, சுட்டுப் பெயருள் அடங்காதோ எனின், பொருளைச் சுட்டாது தொழிலைச் சுட்டுதலானும், காரணக் கிளவி கருவியாதலானும் வேறு ஓதப்பட்டது. (38)
|