அதற்கு மேலும் இருபொருள்

380.ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே.

இ - ள். மேற் சொல்லப்பட்ட கடி என்னுஞ் சொல் ஐயப் பொருண்மையும்., கரித்தற் பொருண்மையும் ஆகலும் ஆம், எ-று.

எ - டு. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின், தேற்றுதல் யார்க்கும் அரிது (குறள்-693). இது ஐயம். கடிமிளகு தின்ற கல்லா மந்தி. இது கரிப்பு.

(88)