மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். எழுத்தொடு பொருந்திய சொல்லே யன்றிச் சிதைந்த சொற்கள் வரினும், தமிழ்வழக்கிற்குப் பொருந்தினவை நீக்கப்படா, எ- று.
அவையாவன;--கந்தம், தசநான்கு, சாகரம், சத்திரம், முத்து, பவளம் எனவரும், பாகதச் சிதைவாகி வருவனவுங் கொள்க.
இவை நான்கு சொல்லினும். இயற்சொல் பெயர்ச் சொல்லும், வினைச் சொல்லும், இடைச்சொல்லும், உரிச்சொல்லுமாகி வரும். திரிசொல்லுந், திசைச் சொல்லும் பெரும்பான்மை பெயரும், சிறுபான்மை வினையுமாகி வரும், வடசொல் பெயரா யல்லது வாராது.
(6)