சுண்ணமாகிய பொருள்கோள் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். சுண்ணமாவதுதான் அளவடியான் அமைந்த ஈரடிக்கண் எண் சீரும் ஒரோவொரு சீராகத்துணித்துப் பொருந்து வழியறிந்து கூட்டிப் பொருளுரைக்க, எ-று. பட்டாங் கென்பது இயல்பு. அது மிகுதலுங் குறைதலுமில்லாத அளவென்று பொருளாயிற்று. | “சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை” |
இதனுட் சுரைமிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை முயற்கு நீத்து எனத் துணித்து ஒட்டப், பொருள் விளங்கியவாறு கண்டு கொள்க. இது நாற்சீர்க்கண்ணே துணித்து ஒட்டியது.
| “தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை1 தணிவேமே வங்கத்துச் சென்றார் வரின். |
இதன்பொருள்:--அஞ்சனத்தன்ன பைங்கூந்தல்! மாமை பொருந்தின மேனிமேல் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட கோழிமுட்டை யுடைத்தாலொத்த பசலை, வங்கத்துச் சென்றார் வரில், தணிவேம், எ - று. இதனுள் எண் சீருள் ஒட்டிவந்தது. எண்சீரென வரையறுத்தமையால் அதன்மேற் சென்று ஒட்டாதென்க. (10)
1. தணிவாமே என்பதும் பாடம்.
|