மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பொருள் ஆராயும் வழி ஈற்றடிக்கண் வரும் இறுதிச் சீர் ஈற்றயலடிக்கண் திரிந்து பொருள்படும் நிலைமையும் நீக்கார், எ - று. இவ்வாறு வருவதும் அடிமறி என்றவாறாம். உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. (12)
1. பொருடெரி மருங்கின் ஈற்றடி யிருசீர் எருத்துவயிற் றிரிபுந் தோற்றமும் வரையார் என்பதும் பாடம்.
|