உயர்திணைப் பொருண்மேல் எண்ணுமுறை நிகழுமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள். ஒருமை யெண்ணின் பொதுமையாகிய ஒருவர் என்னும் சொல்லினின்றும் பிரிந்த ஒருவன், ஒருத்தியென்னுஞ் சொல் அவ்வொருமைக் கல்லது எண்ணு முறைக்கண் ணோடாது, எ - று.
எனவே, எண்ணுமுறைக்கண் ஆண்பாலாயினும் பெண்பாலாயினும் ஒருவர், இருவர் மூவர் என எண்ணினல்லது பால்தோன்ற எண்ணப் படாது என்றவாறாம்.
(42)