இதுவும் அது

422.1கேட்டை என்றா நின்றை என்றா
காத்தை என்றா கண்டை என்றா
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி
முன்னுறக் கிளந்த இயல்பா கும்மே.

இதுவும் அது

இ - ள். இந்நான்கு சொல்லும் முன்னிலை வினைச் சொல்லல் வழி, அசை நிலையாகும், எ - று.

எ - டு. 2“மோரொடுவந்தா டகைகண்டை யாரொடுஞ் சொல்லியாளன்றே வனப்பு” என்றவழிக் கண்டை என்பது அசைநிலை யாயிற்று. ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க.

(30)


1. இச் சூத்திரத்திற்குப்பின் இவ்வுரையின் வினையியலிலுள்ள 243, 244, 245 ஆம் எண் சூத்திரங்கள் பிற உரைப்பதிப்புக்களிற் காணப்படுகின்றன.

2. முல்லைக்கலி-9.