மரபு வழுக்காத்தலை நுதலிற்று.
இ - ள். பல வினையை யுடைய பொதுப் பெயரை ஒரு வினையாற் கூறார் அறிவோர், எ - று. எனவே, பொதுவினையாற் கிளத்தல் வேண்டும், எ - று.
அது, இயம் என்பது கொட்டுவனவும் எறிவனவும் ஊதுவனவும் ஆம். அதனை இயம் கொட்டினார், ஊதினார், எறிந்தார் என்னற்க;