மேலதற் கோர் புறனடை

446.உரிச்சொன் மருங்கினும் உரியவை உரிய.

உரிச்சொல் மருங்கினும் இடைநின்று பொருளுணர்த்துஞ்
சொல்லுள என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். உரிச்சொல்லிடத்தும் வேற்றுமை யுருபுபோல அப்பொருள் வேறுபடுத்தற்குரியவை உரியவாம். எ - று.

அது நனி என்பது உறுவும், தவவும்போல மிகுதி குறித்து வரினும், உறுவன, தவவன, எனப்பொருளுணர வாராது, இடைச் சொற் போலக் குறிப்பினான் மிகுதி யுணர்த்துதலின், இதுவும் பொருள் வேறுபடுக்குஞ் சொல்லாயினல்லது, பொருளுணர வாராமை கண்டுகொள்க. பிறவும் அன்ன.

(54)