மரபு வழுவமைத்தலை நுதலிற்று.
இ - ள். ஒரு பெயராகிப் பல பொருட்கும் உரித்தாகிய பொதுச் சொல்லை வகுத்துக் கூறுதல் தலைமையானும் பன்மையானும், எ - று.
எனவே, தலைமையும் பன்மையும் இல்வழி, பொதுச்சொல்லாற்கிளக்க என்றவாறாம்.
எ - டு. பார்ப்பார் வேதம் என்பதும் அரசர்க்கும் வணிகர்க்கும் பொதுவாயினும், பார்ப்பார் வேதம் எனத் தலைமைபற்றி வந்தது. எயினர் நாடு என்பது பிறவுங் குடி உளவாயினும் பன்மை பற்றி வந்தது. ஆ மேய்ப்பான் என்பதும் அது. இளமரக்கா என்பது தலைமையும் பன்மையும் இல்வழிப் பொதுவாய் வந்தது. பிறவும் அன்ன.
(47)