ஒரு பெயர்ப் பொதுச் சொல்லைச் சொல்லும் முறைமை

47.1ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத்
தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்.

மரபு வழுவமைத்தலை நுதலிற்று.

இ - ள். ஒரு பெயராகிப் பல பொருட்கும் உரித்தாகிய பொதுச் சொல்லை வகுத்துக் கூறுதல் தலைமையானும் பன்மையானும், எ - று.

எனவே, தலைமையும் பன்மையும் இல்வழி, பொதுச்சொல்லாற்கிளக்க என்றவாறாம்.

எ - டு. பார்ப்பார் வேதம் என்பதும் அரசர்க்கும் வணிகர்க்கும் பொதுவாயினும், பார்ப்பார் வேதம் எனத் தலைமைபற்றி வந்தது. எயினர் நாடு என்பது பிறவுங் குடி உளவாயினும் பன்மை பற்றி வந்தது. ஆ மேய்ப்பான் என்பதும் அது. இளமரக்கா என்பது தலைமையும் பன்மையும் இல்வழிப் பொதுவாய் வந்தது. பிறவும் அன்ன.

(47)


1. இளம்பூரணர் முதலியோர் அடுத்த சூத்திரத்தின் முதல் வரியை இதனொடு சேர்த்துள்ளார்கள். இச்சூத்திரங்களின் உரைப்போக்கும் வேறுபடுகின்றது.