பெண்பால் ஈறு

6. ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்.

மகடூஉ வறிசொல் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்.ளகாரமாகிய ஒற்றை அந்தமாகவுடைய சொல் பெண்பால் உணரவருஞ் சொல், எ-று.

ஏகாரம் ஈற்றசை,

(எ - டு.) உண்டாள், உண்ணாநின்றாள், உண்பள்; இவை வினை, கரியள், குறியள் இவை வினைக்குறிப்பு. அவள், திருவினாள்; இவை பெயர்.

(6)