ஆறாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். ஆறாம் வேற்றுமையாவது அதுவெனப் பெயர்பெற்ற வேற்றுமைச்சொல். அது தன்னினானும் பிறிதினானும் இதனது இது என வரும் பெற்றிப்பட்ட பொருட் கிழமையை யுடைத்து, எ-று.
தன் என்றது உடையானை. பிறிதென்றது உடைப்பொருளை. ஈண்டுக் கிளவி என்பது பொருள். கிளக்கப்படுவது கிளவியாயிற்று. கிழமை என்பது உரிமை, தன்னோடும் பொருளோடும் உள்ள உரிமையுணர வரும் ஆறாவதென்றவாறு.
அதுவென்பது ஒருமையுணர்த்தும் சொல்லாகலின், வந்தது கொண்டு வராதது முடித்தல் என்பதனால், பன்மையுணர்த்தும் அகர உருபுங் கொள்க.
எ - டு. சாத்தனது குழை, சாத்தனகுழைகள், உலகத்துக்குழையுடையாரும் பலர், குழையும் பல, ஆயினும், இக்குழை இவனதென்னும் உரிமை தோன்ற வந்தவாறு கண்டுகொள்க.
(17)
1. இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.