இதுவும் அது
இ - ள். சினைப் பொருண்மைக்கண் நிற்கும் பெயர்க்கும் இரண்டாவதும் ஏழாவதும் வினைநிலைக்கண் ஒத்த இயல்பின, எ - று.
எ - டு. கண்ணைக் குத்தினான், கண்ணுட் குத்தினான் எனவரும். கண் என்பது குத்தப்படும் பொருளுமாகிக் குத்துதற்கு இடமும் ஆகி வருதலின், இரண்டற்கும் ஒத்த இயல்பினதாயிற்று, இடம் ஆயினவாறு என்னை யெனின், கண்ணின் கண்ணும் குத்தப்படுவது ஓர் இடம் ஆதலின் என்க. வினைநிலை ஒக்கும். என்றார் ஆயினும் ஏற்கும் வினையே கொள்ளப்படும்.
(2)