இரண்டாவதும் ஏழாவதும் ஒரு பொருட்கண் நிகழ்வுழி வரும்
வேறுபாடு

85.

1முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கை வருமே
முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை
சினைமுன் வருதல் தெள்ளி தென்ப.

இதுவும் இரண்டாவதும் ஏழாவதும் ஒரு பொருட்கண் நிகழ்வ
தோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். முதலும் சினையும் சேரவருஞ் சொற்கு, முதற்கண் அது வரின் சினைக்கு வரும், முதற் கண் வரின் சினைக் கண் கண் வருதல் தெளியப்பட்டது என்று சொல்லுவர் புலவர், எ - று. மயக்கம் அன்று என்றவாறாம்.

எ - டு. யானையது கோட்டைக் குறைத்தான்; யானையைக் கோட்டின்கண் குறைத்தான் என வரும்.

‘கண் என் வேற்றுமை சினை முன்வருதல் தெள்ளிது’ எனவே தெள்ளிதன்றிச் சிறுபான்மை வருதலும் கொள்ளப்படும்.

எ - டு. யானையைக் கோட்டைக் குறைத்தான்.

(4)


1. இந்நூற்பாவில் முன்னிரண்டடிகளை ஒரு நூற்பாவாகவும், பின்னிரண்டடிகளை வேறொரு நூற்பாவாகவும் கொள்வர் பிறவுரையாசிரியர்கள்.