மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். இறுதிக்கண் நின்ற பெயர்முன்னர்ப் பொருள் அறியவரும் உரையினால், வேறுபாடறிப, அதன் இயல்பு உணர வேண்டுவார், எ - று.
எ - டு. புலி கொல் யானை ஓடுகின்றது; புலி கொல் யானைக் கோடு வந்தது என்றவழி, கொலையுண்ட பொருள் விளங்கியவாறு கண்டு கொள்க.
(11)