ஆறாவதனோடு ஏழாவது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஆறாம் வேற்றுமைக்கண் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழாவதும் ஆம்; பொருள் உறையும் நிலத்துக்கண், எ-று. எனவே உறையாப் பொருட்கண் வாராது என்றவாறாம். உறை பொருட்கண் வந்தது--யானையது காடு. உறையும் நிலத்துக்கண் வந்தது--காட்டது யானை. அது காட்டுள் யானை எனவும் வரும். (16)
|