இஃது, இலக்கண வழக்கேயன்றி மரூஉக்களும் புணர்க்கப்படும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. மருவின் தொகுதி மயங்கு இயல் மொழியும் - (இலக்கண வழக்கேயன்றி) மரூஉத்திரளாகிய தலைதடுமாறாக மயங்கின இயல்பையுடைய இலக்கணத்தொடு பொருந்தின மரூஉவழக்கும். உரியவை உள புணர் நிலைச் சுட்டு - உரியன உள புணரும் நிலைமைக்கண். எ - டு: மீகண், முன்றில் என வரும். 'நிலை' என்றதனான் இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ வழக்கல்லா மரூஉவழக்கும். புணர்க்கப்படும் எனக்கொள்க. (9)
|