சாரியை வருமிடம்
இஃது, சாரியை வரும் இடம் கூறுதல் நுதலிற்று.
அவற்றுவழி மருங்கின் சாரியை வரும்-அப் பெயர்களின் பின்னாகிய இடத்தின்கண்ணே சாரியை வரும்.
எ - டு: ஆடூஉவின் கை, மகடூஉவின் கை, பலவற்றுக் கோடு என வரும்.