இஃது, இன்இறுதி திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. அளபாகும் மொழி முதல் -அளபுப் பெயராகும் மொழி முதற்கண், நிலைஇய உயிர்மிசை னஃகான் - நிலைபெற்ற உயிருக்குமேலாய் நின்ற இன்சாரியையது னகாரம், றஃகான் ஆகிய நிலைத்து - றகாரமாகிய நிலைமைத்து. பதிற்றகல், பதிற்றுழக்கு என்புழி அவ்வாறு வருதல் அறிக. 'நிலைத்து' என்றதனால், பிறவழியும் இன்னின் னகரம் றகர மாதல் கொள்க. எ - டு: பதிற்றொன்று, பதிற்றேழு என வரும். (19)
|