4. சாரியைப் புணர்ச்சி

அத்து முதல் கெடுதல்

126.அத்தின் அகரம் அகரமுனை யில்லை.

இஃது, அத்து முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அத்தின் அகரம் அகரமுனை இல்லை - அத்துச் சாரியையின் அகரம் அகரவீற்றுச் சொல்முன்னர் இல்லையாகும்.

எ - டு: மகத்துக்கை என வரும்.

(23)