4. சாரியைப் புணர்ச்சி

அம் ஈறு கெடுமிடம்

131.மென்மையும் இடைமையும் வரூஉம் காலை
இன்மை வேண்டும் என்மனார் புலவர்.

இதுவும் அது.

(இ-ள்) மென்மையும் இடைமையும் வரும்காலை-அம்மின் இறுதி மென்மையும் இடைமையும் வருமொழியாய் வருங்காலத்து; இன்மை வேண்டும் என்மனார் புலவர் - இன்றி முடிதலை வேண்டும் என்று சொல்லுவர் புலவர்.

எ - டு: புளிய ஞெரி, நுனி, மூரி, யாழ், வட்டு என வரும்

உரையிற்கோட லென்பதனால், புளிய விலை எனவும் உயிர் வருவழிக் கேடும் கொள்க.

(28)