5.எழுத்துச் சாரியை

குற்றெழுத்துக்குச் சாரியை

137.வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய.

இஃது, நெட்டெழுத்திற்குச் சில சாரியை விலக்கினமையின் குற்றெழுத்திற்கும் சில விலக்குவதுண்டுகொல் என்னும் ஐயம் தீர்த்தல் நுதலிற்று.

(இ-ள்) வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய - வரலாற்று முறைமையை யுடைய மூன்று சாரியையும் குற்றெழுத்து உடைய.

எ - டு: அகாரம், அகரம், அஃகான் என வரும்.

` வரன்முறை ' என்றதனான், அஃகான் என்புழி, ஆய்தமிக்கு முடியுமென்பது கொள்க.

(34)