ஐ ஒளவின் சாரியை
இஃது, அவற்றுள் காரமுங் கானும் என்பதற்கு ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) ஐகாரம் ஒளகாரம் கானொடும் தோன்றும் - நெட்டெழுத்துக்களில் ஐகாரமும் ஒளகாரமும் முன்விலக்கப்பட்ட கானொடும் தோன்றும்.
எ - டு: ஐகான், ஒளகான் என வரும்.