1. உயிரீறு மெய்யீறுகளின் பொதுப்புணர்ச்சி

ணளமுன் தநமெய் டணவாதல்

151.ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும்.

இதுவும் அது.

(இ-ள்) ண ள என் புள்ளிமுன் - ணள என்னும் புள்ளிகளின் முன்னர் (அதிகாரத்தினால் தகார்ர நகாரங்கள் வரின் ) ட , ண எனத் தோன்றும் அவை நிரனிறையால் டகார ணகாரங்களாய்த் தோன்றும்.

எ - டு: மண்டீது , மண்ணன்று , முஃடீது, முண்ணன்று என வரும்.

(8)