இஃது, அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் தம்மிற் புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) உயிரும் புள்ளியும் இறுதியாகி அளவும் நிறையும் எண்ணும் சுட்டி உள எனப்பட்ட எல்லா சொல்லும் - உயிரும் புள்ளியும் ஈறாய் அளவையும் நிறையையும் எண்ணையும் கருதி உளவென்று சொல்லப்பட்ட எல்லாச் சொற்களும், தம் தம் கிளவி தம் அகப்பட்ட முத்தைவரும் காலம் தோன்றின் ஏ என்சாரியை ஒத்தது என்ப-தமக்கு இனமாகிய சொற்களாய்த் தமக்கு அகப்படும் மொழியாயுள்ளன தம்முன்னே வரும் காலம் தோன்றுமாயின் ஏ என்னுஞ் சாரியை பெற்று முடிதலைப் பொருந்திற்று என்ப. எ - டு:உழக்கே யாழாக்கு, கலனே பதக்கு என இவை அளவுப் பெயர். தொடியேகஃசு, கொள்ளே ஐயவி என இவை நிறைப்பெயர். காணியே முந்திரிகை, காலேகாணி என இவை எண்ணுப் பெயர். உயிரீறு புள்ளியீறு என்றதனானே, ஏ என் சாரியை பெறாதனவும் உளவென்று கொள்க. குறுணி நானாழி என வரும். (22)
|