இஃது , எய்தியது விலக்குதல் நுதலிற்று .
(இ-ள்) அரை என வரும் பால் வரை கிளவிக்கு புரைவது அன்று சாரியை இயற்கை - அரை என்று சொல்ல வருகின்ற பொருட்கூற்றை யுணரநின்ற சொல்லிற்குப் பொருந்துவதன்று மேற்கூறிய ஏ என் சாரியை பெறும் இயல்பு. எ - டு: உழக்கரை, தொடியரை, ஒன்றரை என வரும். இஃது, "ஒட்டுதற் கொழுகிய வழக்கு" (புணரியல் - 30) அன்று என்பதனான் விலக்குண்ணாதோவெனில், `தம்மகப்பட்ட' என்று வருமொழியையும் வரைந்தோதினமையின் இதற்கு அவ்விதி செல்லாதென்பது. (23)
|