1. உயிரீறுகள்

உகர வீற்றுச் சுட்டுக்கு அன்சாரியை

177.சுட்டுமுத லுகரம் அன்னொடு சிவணி
ஒட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே.

இஃது, உகரவீற்றுட் சிலமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகரவீற்றுச் சொல் அன்சாரியையொடு பொருந்தி, ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடும்-தான் பொருந்திய மெய்யை ஒழித்து உகரம்கெடும்.

எ - டு: அதனை, அதனொடு: இதனை, இதனொடு; உதனை,உதனொடு என ஒட்டுக.

(4)