இஃது, ஓகார ஈறு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) ஓகார இறுதிக்குச் சாரியை ஒன் - ஓகாரவீற்றுக்கு இடைவரும் சாரியை ஒன்சாரியை. எ - டு: கோஒனை, கோஒனொடு என ஒட்டுக.1
1.சிறுபான்மை இன்சாரியை வருமென்று கொள்க. `ஒன்றாக நின்ற கோவினை யடர்க்க வந்த' எனவும், கோவினை கோவினோடு சோவினை சோவினொடு ஓவினை ஓவினொடு எனவும் வரும். ஓவென்பது மதகுநீர் தாங்கும் பலகை. (நச்) (8)
|