ஞ, ந மெய் ஈற்றுக்கு இன்னே சாரியை
இஃது, புள்ளியீற்று ஞகாரவீறும் நகாரவீறும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை - ஞ ந என்று சொல்லப்படுகின்ற புள்ளியீறுகட்கு வரும் சாரியை இன்சாரியை.
எ - டு: உரிஞினை, உரிஞினொடு; பொருநினை, பொருநினொடு என ஒட்டுக.