இஃது, னகரவீற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) தான் யான் என்னும் ஆ ஈர் இறுதியும்- தான் யான் என்று சொல்லப்படும் அவ்விரண்டு னகர வீறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இல-மேல் மகர வீற்றுட் சொல்லப்பட்ட மூன்று பெயரோடும் வேறுபாடின்றித் தானென்பது நெடுமுதல் குறுகியும் யான் என்பதன்கண் ஆகாரம் எகாரமாய் யகரங்கெட்டும் முடியும். எ - டு: தன்னை, தன்னொடு; என்னை என்னொடு என ஒட்டுக. (20)
|