3. முற்றுகர குற்றுகர ஈறுகள்

இரட்டி முடிதல் சாரியை பெறாமை

198.அவைதாம்
இயற்கைய வாகுஞ் செயற்கைய என்ப.

இஃது, மேற்சாரியை விலக்கப்பட்டவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அவைதாம் - மேற் சாரியை பெறாவென விலக்கப் பட்ட அவைதாம், இயற்கையவாகும் செயற்கைய என்ப - இயல்பாய் முடிதலையுடையவாகும் செய்தியையுடைய வென்று சொல்லுவர்.

எ - டு: யாட்டை, யாட்டொடு என ஒட்டுக.

`செயற்கைய' என்றதனால்; இனவொற்று மிக்கன சிறுபான்மை இன்பெறுதலும் கொள்க. யாட்டினை, யாட்டினொடு, முயிற்றினை, முயிற்றினொடு என வரும்.

(25)