இதுவும், குற்றுகரவீற்றுட் சிலவற்றிற்கு ஏழாம் உருபோடு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஏழன் உருபிற்கு - ஏழாம் வேற்றுமைக்கு, திசைப் பெயர் முன்னர் - திசையை உணரநின்ற பெயர்களின் முன்னர், சாரியைக்கிளவி இயற்கையும் ஆகும் - இவ்வீற்றிற்கு முன் கூறிய இன்சாரியையாகிய சொல் நின்று முடிதலேயன்றி நில்லாது இயல்பாயும் முடியும்; ஆ வயின் இறுதி மெய்யொடும் கெடும் - இயல்பாயவழிப் பெயர் இறுதிக் குற்றுகரம் தன்னால் ஊரப்பட்ட மெய்யொடும் கெடும். எ - டு: வடக்கின்கண், கிழக்கின்கண், தெற்கின்கண், மேற்கின்கண் எனவும்; வடக்கண், கிழக்கண், தெற்கண், மேற்கண் எனவும் வரும். உருபு முற்கூறியவதனால், கீழ்சார், கீழ்புடை; மேல்சார், மேல்புடை; தென்சார், தென்புடை; வடசார், வடபுடை என இவ்வாறு சாரியை பெறாது திரிந்து முடிவனவெல்லாம் கொள்க.1 (29)
1.இன்னும் இதனானே கீழைக்குளம், மேலைக்குளம், கீழைச்சேரி மேலைச்சேரி என ஐகாரம் பெறுதலும் கொள்க.(நச்.)
|