இஃது, அகர ஈற்று வினைச்சொல் முடிபும் இடைச்சொல் முடிபும் கூறுதல் நுதலிற்று. (இ-ள்) வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்-அகர வீற்று வினையெச்சமாகிய சொல்லும் உவமச்சொல்லும், என என் எச்சமும் சுட்டின் இறுதியும்- என என்று சொல்ல வருகின்ற எச்சச் சொல்லும் சுட்டாகிய அகர வீறும், ஆங்க என்னும் உரையசைக்கிளவியும்- ஆங்க என்று சொல்லப்படும் உரையசையாகிய சொல்லும் ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகும்- மேலைச்சூத்திரத்துச் சொன்ன வல்லெழுத்து மிக்கு முடியும். எ - டு: உணக்கொண்டான், தினக்கொண்டான் ; சென்றான், தந்தான், போயினான் என்பன வினையெச்சம். மேலனவெல்லாம் இடைச்சொல். புலிபோலக்கொன்றான் என்பது உவமம். கொள்ளெனக்கொண்டான் என்பது என என் எச்சம், அக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் என்பன சுட்டின் இறுதி. ஆங்கக் கொண்டான் என்பது உரையசைக்கிளவி. (2)
|