இஃது, அகரச்சுட்டு மென்கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின் - அகரச்சுட்டின் முன்னர் ஞ ந ம க்கள் முதலாகிய மொழி வருமொழியாய்த் தோன்றின், ஒட்டிய ஒற்று இடைமிகுதல் வேண்டும்- தத்தமக்குப் பொருந்திய ஒற்று இடைக்கண்ணே மிகுதல் வேண்டும். எ - டு: அஞ்ஞாலம், நூல், மணி என வரும். (3)
|