இஃது அச்சுட்டுச் செய்யுள் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) நீட வருதல் செய்யுளுள் உரித்து- அகரச்சுட்டிற்கு நீளும்படியாக வருதல் செய்யுளிடத்து உரித்து. எ - டு: "ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே" (கிளவி யாக்கம்-1) என வரும். வருமொழி வரையாது கூறினமையின் , இம் முடிபு வன்கண மொழிந்த கணமெல்லாவற்றோடும் சென்றது. உதாரணம் பெற்றவழிக்கொள்க. (6)
|